/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருத்தணியில் 2 மாதத்தில் 60 'டூ - வீலர்'கள் திருட்டு
/
திருத்தணியில் 2 மாதத்தில் 60 'டூ - வீலர்'கள் திருட்டு
திருத்தணியில் 2 மாதத்தில் 60 'டூ - வீலர்'கள் திருட்டு
திருத்தணியில் 2 மாதத்தில் 60 'டூ - வீலர்'கள் திருட்டு
ADDED : டிச 30, 2024 01:28 AM
திருத்தணி,: திருத்தணி காவல் நிலைய எல்லைக்குள், திருத்தணி நகரம் மற்றும் 98 கிராமங்கள் உள்ளன. சில மாதங்களாக திருத்தணியில், வீடுகள் முன் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போயின. இது குறித்து, அடிக்கடி புகார்களும் வந்தன.
இருசக்கர வாகனங்கள் திருடுவது, 'சிசிடிவி' கேமரா பதிவுகளுடன் புகார் கொடுத்தாலும், போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
தினமும் குறைந்தபட்சம் ஒரு இருசக்கர வாகனமாவது, திருத்தணி போலீஸ் எல்லைக்குள் மர்ம நபர்களால் திருடப்படுகிறது. இரு மாதங்களில் மட்டும், 60க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. எனவே, எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றப்பிரிவுக்கு போலீசார் நியமித்து, இருசக்கர வாகன திருட்டை தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.