sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காய்ச்சல் பாதிப்பு 9 மாத குழந்தை பலி

/

காய்ச்சல் பாதிப்பு 9 மாத குழந்தை பலி

காய்ச்சல் பாதிப்பு 9 மாத குழந்தை பலி

காய்ச்சல் பாதிப்பு 9 மாத குழந்தை பலி


ADDED : டிச 11, 2024 12:12 AM

Google News

ADDED : டிச 11, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண் பிரசாத், 31. இவர், மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் கோவிந்தப்பன்நாயக்கர் தெருவில் குடும்பத்துடன் தங்கி, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிகிறார்.

இவரது 9 மாத குழந்தை அகிலன், சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 8ம் தேதி குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் குழந்தை உயிரிழந்தது தெரிந்தது.

இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us