/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெறிச்சோடிய காசிமேடு மீன் மார்க்கெட்
/
வெறிச்சோடிய காசிமேடு மீன் மார்க்கெட்
ADDED : டிச 01, 2024 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு:புயல் காரணமாக, மூன்று நாட்களுக்கு முன் மீன்பிடிக்க சென்ற படகுகள், பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய, மீன்வளத்துறை அறிவித்தது.
இதையடுத்து, காசிமேடில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 200க்கும் மேற்பட்ட படகுகள், ஆந்திராவில் தஞ்சமடைந்துள்ளன.
காசிமேடு துறைமுகம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், திருவிழா கூட்டம் போல் இருக்கும். மீன்களை வாங்க, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவர். மீன்பிடிக்கு சென்ற படகுகள் கரை திரும்பாததால், காசிமேடு மீன்பிடி துறைமுகம், நேற்று வெறிச்சோடியது.