sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டிப்பர் லாரி மோதி ஏட்டு மகன் பலி

/

டிப்பர் லாரி மோதி ஏட்டு மகன் பலி

டிப்பர் லாரி மோதி ஏட்டு மகன் பலி

டிப்பர் லாரி மோதி ஏட்டு மகன் பலி


ADDED : ஜூலை 13, 2025 12:28 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர் :

வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஆயிஷா பீவி. திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். அவரது மகன் அனிப், 17, பிளஸ் 2 மாணவர்.

நண்பர்கள் முகமது ஹனிப், 21, சைப், 18, ஆகியோருடன் சேர்ந்து, ராயபுரத்தில் இருந்து எர்ணாவூர் நோக்கி, எண்ணுார் விரைவு சாலையில் நேற்று மாலை, இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். இதில், அனிப், 'டியூக்' இருசக்கர வாகனத்தில் தனியாக சென்றார்.

திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் சந்திப்பு அருகே, அதே திசையில் பின்னால் வந்த டிப்பர் லாரி, பக்கவாட்டில் உரசியதில் அனிப்பின் இருசக்கர வாகனம், மைய தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அனிப் இறந்துவிட்டார்.

வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, டிப்பர் லாரி ஓட்டுநரான பெருமாள்சாமி, 56, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us