sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 உணவு தருபவரிடம் வாக்குவாதம்: செய்தவரை கடித்து குதறிய நெருநாய்

/

 உணவு தருபவரிடம் வாக்குவாதம்: செய்தவரை கடித்து குதறிய நெருநாய்

 உணவு தருபவரிடம் வாக்குவாதம்: செய்தவரை கடித்து குதறிய நெருநாய்

 உணவு தருபவரிடம் வாக்குவாதம்: செய்தவரை கடித்து குதறிய நெருநாய்


ADDED : டிச 08, 2025 04:54 AM

Google News

ADDED : டிச 08, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில், தனக்கு உணவு தரும் நபரிடம் வாக்குவாதம் செய்த நபரை தெருநாய் கடித்து குதறியது.

திருவல்லிக்கேணி நடுக்குப்பம், 3வது தெருவைச் சேர்ந்தவர் தமிழ்வாணன், 59; மீனவர். இவர், நேற்று மாலை 6:00 மணியளவில், அதே பகுதியில் 6வது தெருவில் உள்ள, குடிநீர் அடிகுழாயில் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது, அந்த பம்பில் இருந்து சத்தம் வந்துள்ளது.

இதனால், அந்த தெருவில் வசித்து வரும் எழில் என்பவர், இங்கு தண்ணீர் பிடிக்கக் கூடாது என கூறியுள்ளார்.

அப்போது, தமிழ்வாணனுக்கும் எழிலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, எழில் தினமும் உணவு தந்து வளர்த்து வரும் தெரு நாய் ஒன்று, தமிழ்வாணனின் இடது காலை கடித்து குதறியுள்ளது. உடனடியாக, ஆட்டோவில் ஏறிச் சென்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, மெரினா காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us