sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 செல்லபிராணிகள் பதிவு: வரும் 14ம் தேதி கடைசி

/

 செல்லபிராணிகள் பதிவு: வரும் 14ம் தேதி கடைசி

 செல்லபிராணிகள் பதிவு: வரும் 14ம் தேதி கடைசி

 செல்லபிராணிகள் பதிவு: வரும் 14ம் தேதி கடைசி


ADDED : டிச 08, 2025 04:53 AM

Google News

ADDED : டிச 08, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் செல்ல பிராணிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் வரும் 14ம் தேதி வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செல்ல பிராணிகள் வளர்ப்போர், மாநகராட்சியில் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, மாநகராட்சி இணையதளம் மூலம் உரிமம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஏழு நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில், உரிமம், தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்தப்படுகிறது. வேலைக்கு செல்வோர் வசதிக்காக, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நேற்று, 956 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, 'மைக்கோ சிப்' பொருத்தி, உரிமம் வழங்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

செல்ல பிராணிகள் குறித்து பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை, 96,056 செல்ல பிராணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 49,347 பிராணிகளுக்கு உரிமம் வழங்கி, தடுப்பூசி போட்டு, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது.

ஏழு மையங்களும், அனைத்து நாட்களும் செயல்படும். வரும் 14ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கடைசி சிறப்பு முகாம் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us