/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலியுடன் தகராறு: 3வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை
/
காதலியுடன் தகராறு: 3வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை
காதலியுடன் தகராறு: 3வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை
காதலியுடன் தகராறு: 3வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை
ADDED : டிச 09, 2025 05:13 AM
தாம்பரம்: தாம்பரத்தில், காதலியுடன் ஏற்பட்ட பிரச்னையில், நீட் தேர்வுக்கு படித்து வந்த வாலிபர், மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.
ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் ஆரூண் பாஷா, 22; டிப்ளமா இன் பார்மஸி படித்துள்ளார். இவர், மேற்கு தாம்பரம், கோகுல் நகரில் உள்ள தன் சகோதரர் பாரத்துடன் தங்கி, நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.
அப்போது, சஹானா என்ற பெண்ணுடன், ஆருண் பாஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை, ஆருண் பாஷா, தன் மொபைல் போனில் சஹானாவுடன் பேசியுள்ளார். அப்போது, மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால் மனமுடைந்த அவர், தான் தங்கியிருந்த கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து, கையில் கத்தியால் கிழித்துக் கொண்டு கீழே குதித்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

