/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூடுதல் கட்டணம் வசூலித்த 'ஏர்டெல்'; ரூ.67,000 இழப்பீடு வழங்க உத்தரவு
/
கூடுதல் கட்டணம் வசூலித்த 'ஏர்டெல்'; ரூ.67,000 இழப்பீடு வழங்க உத்தரவு
கூடுதல் கட்டணம் வசூலித்த 'ஏர்டெல்'; ரூ.67,000 இழப்பீடு வழங்க உத்தரவு
கூடுதல் கட்டணம் வசூலித்த 'ஏர்டெல்'; ரூ.67,000 இழப்பீடு வழங்க உத்தரவு
UPDATED : டிச 12, 2025 08:57 AM
ADDED : டிச 12, 2025 05:15 AM
சென்னை: கூடுதல் கட்டணம் வசூலித்த, 'ஏர்டெல்' நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 67,000 ரூபாய் இழ ப்பீடு வழங்கும்படி, சென் னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.கே.எஸ்.காந்தி, சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
'ஏர்டெல்' நிறுவனம் வழங்கும், 'டிடிஎச்' சேவையில், மாதம் 1,099 ரூபாய் திட்டத்தை தேர்ந்தெடுத்து, அதன் வாயிலாக 350 சேனல்கள், இணையம் மற்றும் தொலைபேசி சேவைகளை பயன்படுத்தி வந்தேன். ஆனால், ஏர்டெல் நிறுவனம் மாதம், 1,099 ரூபாய்க்கு பதிலாக, கூடுதலாக 600 ரூபாய் வசூலித்தது.
இதுகுறித்து, ஏர்டெல் நிறுவனத்திடம் புகார் அளித்தும், கூடுதல் கட்டணத்தைத் திரும்ப வழங்கவில்லை. புகாரின்மீது உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சேவை குறைபாடுடன் நடந்துகொ ண்ட நிறுவனம், கூடுதல் கட்டணத்தை திருப்பி தருவதோடு, தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த, சென்னை தெற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு:
வாடிக்கையாளருக்கு தெரியாமல் கூடுதல் கட்டணம் வசூலித்தது சேவை குறைபாடுதான். வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், கூடுதலாக வசூலித்த கட்டணம், 7,000 ரூபாய், வழக்கு செலவாக, 10,000 ரூபாய் என, மொத்தம் 67,000 ரூபாயை, இரண்டு மாதங்களில் ஏர்டெல் நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

