ADDED : ஏப் 11, 2025 05:36 AM
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு 11.15 மணியளவில் சென்னை வந்தார்.
டில்லியில் இருந்து நேற்றிரவு 10:20 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்த அமித்ஷாவை மத்தியமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, வானதி எம்.எல்.ஏ., முன்னாள் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.
இன்று காலை முதல் மாலை வரை தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுடன், அவர் ஆலோசனை நடத்துகிறார்.
பின் அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசவும் அமித்ஷா திட்டமிட்டுள்ளார். மாலை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு செல்கிறார். அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் அங்கு வர உள்ளனர். அங்கும் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

