sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறி வெளிநாட்டுக்கு தப்ப முயன்றவர் கைது

/

இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறி வெளிநாட்டுக்கு தப்ப முயன்றவர் கைது

இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறி வெளிநாட்டுக்கு தப்ப முயன்றவர் கைது

இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறி வெளிநாட்டுக்கு தப்ப முயன்றவர் கைது


ADDED : நவ 20, 2024 12:17 AM

Google News

ADDED : நவ 20, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,சென்னை விமான நிலையத்தில் இருந்து, மலேஷியாவின் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ பயணியர் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட தயாராக இருந்தது. பயணியரின் விபரங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

முன்னுக்குப்பின் முரணாக பேசியவரின் பாஸ்போர்ட்டை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், முஜீப் உசைன், 40, என பெயரில் இருந்தது. ஆனால், அது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது.

விசாரணையில் முஜீப் உசைன், வங்கதேசத்தில் இருந்து தப்பித்து, இந்தியாவிற்கு சட்டவிரோதமாக வந்து, போலியான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை பெற்றது தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள சில உணவகங்களில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். சென்னையில் உள்ள சிலர், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, குடியுரிமை அதிகாரிகள், முஜிப் உசேனை பிடித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பயணி நடுவானில் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்தவர் ராசாத்தி, 37. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில், ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக சென்றிருந்தார். நுரையீரல் பிரச்னை இருந்ததால், வேலையை விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தார்.நேற்று மலேஷியாவில் இருந்து சென்னைக்கு, காலை 7:00 மணிக்கு வரும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ராசாத்திக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.விமானம் நேற்று காலை 7:00 மணிக்கு சென்னை வந்தது. விரைந்து வந்த மருத்துவ குழுவினர், ராசாத்தியை பரிசோதித்தபோது, விமானத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us