sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மாடியில் இருந்து விழுந்து பீஹார் வாலிபர் பலி

/

 மாடியில் இருந்து விழுந்து பீஹார் வாலிபர் பலி

 மாடியில் இருந்து விழுந்து பீஹார் வாலிபர் பலி

 மாடியில் இருந்து விழுந்து பீஹார் வாலிபர் பலி


ADDED : ஜன 03, 2026 05:59 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை: மது போதையில், இரண்டாவது தளத்தில் இருந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீஹார் மாநிலம், பிரிதீப்பூர் கிராமத்தைச் சேர்ந்தோர் ராஜேஷ், 35, விஷால், 25; கட்டுமான தொழிலாளர்கள்.

சென்னை, நீலாங்கரை, சந்தீப் அவென்யூ பகுதியில், புதிதாக கட்டி வரும் கட்டடத்தில் இருவரும் தங்கி, டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, இரண்டாவது தளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், ராஜேஷ், கால் இடறி விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற விஷாலும், மாடியில் இருந்து விழுந்தார்.

தலையில் பலத்த காயமடைந்த ராஜேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். விஷாலுக்கு முதுகு தண்டுவடம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. நீலாங்கரை போலீசாா், ராஜேஷ் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிருக்கு ஆபத்தான நிலையில், ராயப்பேட்டை மருத்துவமனையில் விஷால் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us