ADDED : ஜன 17, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் தேவராஜன், 22; தனியார் நிறுவன ஊழியர் 'நண்பரை பார்த்து வருகிறேன்' என இரு தினங்களுக்கு முன் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில் வாசலில் உள்ள குளத்தில், தேவராஜன் உடல் அழுகிய நிலையில் நேற்று மிதந்தது.
உடலை மீட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.

