/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமெரிக்கா துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
அமெரிக்கா துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : நவ 05, 2025 03:02 AM
சென்னை: மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துாதரகம், நடிகை திரிஷா வீடு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்ற வளாகம், அரசு தலைமை வழக்கறிஞர்கள் அலுவலகம் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில் வெடிப்பொருட்கள் ஏதும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து, மிரட்டல் கடிதம் வந்த இ - மெயில் ஐ.டி., குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

