sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

3 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்

/

3 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்

3 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்

3 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்


ADDED : அக் 13, 2025 05:00 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு: விஜயகாந்த் வீடு, கட்சி தலைமை அலுவலகம் மற்றும் மாநகராட்சி பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று காலை மின்னஞ்சல் வந்தது. அதில், கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கும், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர், மேற்கண்ட அலுவலகம், வீடுகளில் ஒரு மணி நேரம் சோதனை நடத்திய பின், மிரட்டல் வெறும் புரளி என, போலீசார் தெரிவித்தனர்.

 வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல், அஷ்டலட்சுமி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவிற்கும், நேற்று, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மதுரவாயல் போலீசார் விசாரித்து, நொளம்பூரில் துணிகளுக்கு இஸ்திரி போடும் தொழில் செய்யும் விக்னேஷ்வரனை, 40, கைது செய்தனர். புகையிலை போதை பொருட்கள் கடைகளில் கிடைக்காததால், போலீசாரை அலைக்கழிக்க இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us