/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இலவச வீட்டுமனை பட்டாவுக்கு லஞ்சம்: கிராம சபையில் புகார்
/
இலவச வீட்டுமனை பட்டாவுக்கு லஞ்சம்: கிராம சபையில் புகார்
இலவச வீட்டுமனை பட்டாவுக்கு லஞ்சம்: கிராம சபையில் புகார்
இலவச வீட்டுமனை பட்டாவுக்கு லஞ்சம்: கிராம சபையில் புகார்
ADDED : ஆக 16, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்முடிச்சூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க, அரசியல் பிரமுகர்கள் லஞ்சம் கேட்பதாக புகார் அளிக்கப்பட்டது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் நேற்று, கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெற, முடிச்சூர் ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளிடம், அரசியல் பிரமுகர்கள் லஞ்சம் கேட்பதாக ஒருவர் குற்றம் சாட்டினார். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.