sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருவிழாவில் பலியிட இருந்த எருமை கன்று மீட்பு

/

திருவிழாவில் பலியிட இருந்த எருமை கன்று மீட்பு

திருவிழாவில் பலியிட இருந்த எருமை கன்று மீட்பு

திருவிழாவில் பலியிட இருந்த எருமை கன்று மீட்பு


ADDED : ஆக 18, 2025 02:44 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவல்லிக்கேணி:திருவல்லிக்கேணியில் உள்ள, மாதங்கீஸ்வரி கோவிலில் பலியிட இருந்த எருமை கன்று மீட்கப்பட்டது.

சமூக வலைதளத்தில், 'டிவி' சீரியல் நடிகை சந்தியா 'வீடியோ' ஒன்றை வெளியிட்டார். அதில், 'நேற்று காலை, 11:00 மணியளவில், திருவல்லிக்கேணி ராம் நகர், நடேசன் சாலையில் உள்ள, மாதங்கீஸ்வரி கோவில் திருவிழாவில் எருமை கன்று ஒன்றை பலியிட இருக்கிறார்கள்.

தயவு செய்து அதை பலியிட வேண்டாம். அதற்கான பணம் எவ்வளவோ தந்து விடுகிறேன்' என, கூறியிருந்தார்.

எருமை கன்றை வேனில் ஏற்றிச்செல்லும் காட்சியையும் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, விலங்குகள் நல ஆர்வலர் சாய் விக்னேஷ் மற்றும் இவரது நண்பர்கள் அந்த எருமை கன்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எருமை கன்று பலியிட இருப்பது பற்றி, ஐஸ்ஹவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் எருமை கன்றை மீட்டு, சென்னை புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us