ADDED : ஆக 18, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொரட்டூர்:தலைமை காவலரை தாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கொரட்டூர், சாவடி தெரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயராம், 65. ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர்.
ஜெயராம் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குடியிருப்புவாசிகள் நேற்று முன்தினம் தகவல் அளித்தனர். கொரட்டூர் தலைமை காவலர் ரமேஷ், 45, அங்கு சென்று, சமரசம் செய்ய முயன்றார். ரமேஷை திட்டிய ஜெயராம், பூட்டை எடுத்து, ரமேஷின் தலையில் அடித்தார்.
காயமடைந்த ரமேஷை, குடியிருப்புவாசிகள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து, வழக்கு பதிந்த கொரட்டூர் போலீசார், ஜெயராமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.