sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழிலாளியை தாக்கிய ராணுவ வீரர் மீது வழக்கு

/

தொழிலாளியை தாக்கிய ராணுவ வீரர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய ராணுவ வீரர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய ராணுவ வீரர் மீது வழக்கு


ADDED : ஆக 18, 2025 02:42 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளசரவாக்கம்:புது வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியை தாக்கிய, ராணுவ வீரர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

குன்றத்துார், அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் செல்வதுரை, 38. இவர், வளசர வாக்கம் வேலன் நகர் ஏழாவது தெருவில், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த வீட்டின் பின்புறம் வசிக்கும் ராணுவ வீரரான சீனிவாசன், 42, என்பவர், நேற்று முன்தினம் இரவு, பணி நடக்கும் வீட்டிற்கு சென்று, 'வேலை செய்வதால் சத்தம் அதிகமாக வருகிறது. என்னால் துாங்க முடியவில்லை' எனக்கூறி, செல்வதுரை மற்றும் பரணிபுத்துாரைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் கார்த்திக், 43, ஆகியோரிடம் தகராறு செய்தார்.

மேலும், அங்கு கிடந்த மண் வெட்டியை எடுத்து, செல்வதுரையை தாக்கினார். இதையடுத்து இருவரும் சேர்ந்து, சீனிவாசன் கையில் இருந்த மண்வெட்டியை பறித்து, அவரை தாக்கினர்.

இதுகுறித்து, இரு தரப்பினரும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், ராணுவ வீரர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us