/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பிட்புல்' நாய் கடித்து குதறியதில் சமையல்காரர் பரிதாப பலி
/
'பிட்புல்' நாய் கடித்து குதறியதில் சமையல்காரர் பரிதாப பலி
'பிட்புல்' நாய் கடித்து குதறியதில் சமையல்காரர் பரிதாப பலி
'பிட்புல்' நாய் கடித்து குதறியதில் சமையல்காரர் பரிதாப பலி
ADDED : ஆக 20, 2025 12:28 AM

ஜாபர்கான்பேட்டை, 'பிட்புல்' ரக நாய் கடித்து குதறியதில், சமையல்காரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.எம்., கார்டனை சேர்ந்தவர் கருணாகரன், 48; சமைல்காரர். ஆறு மாதங்களுக்கு முன் வலது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார். அவ்வப்போது சமையல் வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் ஜவஹர் என்பவருடன், சமையல் வேலைக்கு சென்று வந்த அவர், மாலை 3:00 மணியளவில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த பூங்கொடி, 48, என்பவர் வீட்டில் சங்கிலி போட்டு கட்டி வைத்திருந்த, 'பிட்புல்' ரக வளர்ப்பு நாய், சங்கிலியை உடைத்து வெளியே வந்தது. அது, திடீரென கருணாகரனின் வலது தொடையில் கடித்து குதறியது .
நாயை பிடிக்க வந்த அதன் உரிமையாளர் பூங்கொடியையும் கடித்தது. இதில், பூங்கொடியின் கால் மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.
இதில், கருணாகரன் மயங்கி விழுந்ததால், அவசர கால '108 ஆம்புலன்ஸ்' வரவழைக்கப்பட்டது. பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள், கருணாகரன் உயிரிழந்ததாக தெரிவித் தனர்.
குமரன் நகர் போலீசார், கருணாகரன் உடலை, பிரேத பரிசோதனைக்காக, கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த பூங்கொடி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அஜராக்கிரதையாக நாய் வளர்த்ததாக பூங்கொடி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மாநகராட்சி ஊழியர்கள் நாயை பறிமுதல் செய்து தி.நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.