sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சென்னை வீரர் சாரதி வாள்வீச்சில் வெண்கலம்

/

 சென்னை வீரர் சாரதி வாள்வீச்சில் வெண்கலம்

 சென்னை வீரர் சாரதி வாள்வீச்சில் வெண்கலம்

 சென்னை வீரர் சாரதி வாள்வீச்சில் வெண்கலம்


ADDED : டிச 31, 2025 05:09 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேசிய வாள்வீச்சு போட்டியில், சென்னை வீரர் சாரதி, வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 69வது தேசிய வாள்வீச்சு போட்டி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது.

இதில், நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் போட்டியிட்டனர். தமிழகம் சார்பில் 12 ஆண்கள், 12 பெண்கள் என 24 பேர் பங்கேற்றனர். இதன் இறுதிப் போட்டிகள், நேற்று முன்தினம் நடந்தன.

ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில், தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த சாரதி, 15 வயது சிறுவன், வெண்கலப் பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

தொடர்ந்து நடந்த ஆடவருக்கான குழு போட்டியிலும், தமிழக அணி, தன் சிறப்பான ஆட்டத்தால் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளது.

தமிழக அணியில் சென்னையின் திருக்குமரன், 17, கன்னியாகுமரியின் நிபின், 17, அகிலேஷ், 15, நாமக்கல்லின் சர்மா, 15, ஆகியோர் இடம் பெற்றனர்.






      Dinamalar
      Follow us