sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.6.50 லட்சம் மோசடி வழக்கு சிந்தாதிரிப்பேட்டை நபர் கைது

/

ரூ.6.50 லட்சம் மோசடி வழக்கு சிந்தாதிரிப்பேட்டை நபர் கைது

ரூ.6.50 லட்சம் மோசடி வழக்கு சிந்தாதிரிப்பேட்டை நபர் கைது

ரூ.6.50 லட்சம் மோசடி வழக்கு சிந்தாதிரிப்பேட்டை நபர் கைது


ADDED : நவ 04, 2025 12:23 AM

Google News

ADDED : நவ 04, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி.நகர்: நகர்ப்புற வாரிய குடியிருப்புகள் வாங்கி தருவதாக கூறி, 6.50 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வேளாண்மை நலத்துறை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடி, கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அம்பத்ராஜ், 31; மாநகராட்சி ஒப்பந்த ஊழியர். இவருக்கு, வேளாண்மை உழவர் நலத்துறையில் பணிபுரியும் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சரவணன், 53, என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

சரவணன், அம்பத்ராஜுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வீடுகள் வாங்கி தருவதாக, ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பிய அம்பத்ராஜ், கடந்த 2023 மார்ச் 6ம் தேதி, தனக்கு தெரிந்த சசிகலா, சதீஷ், ரேகா, புவனேஸ்வரி ஆகியோரிடம் இருந்து, 6.50 லட்சம் ரூபாய் பெற்று, சரவணனிடம் கொடுத்துள்ளார்.

இரண்டரை ஆண்டுகளாகியும் சரவணன், வீடு வாங்கி கொடுக்காததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து வடக்கு மண்டல கூடுதல் கமிஷனரிடம் அம்பத்ராஜ் புகார் அளித்தார்.

அவரது உத்தரவின்படி கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட, வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலக உதவியாளராக பணிபுரியும் சரவணனை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us