sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சோழமண்டலம் அடுக்குமாடி வளாகம் விமான ஆணையம் அனுமதி சான்று

/

சோழமண்டலம் அடுக்குமாடி வளாகம் விமான ஆணையம் அனுமதி சான்று

சோழமண்டலம் அடுக்குமாடி வளாகம் விமான ஆணையம் அனுமதி சான்று

சோழமண்டலம் அடுக்குமாடி வளாகம் விமான ஆணையம் அனுமதி சான்று


ADDED : டிச 28, 2024 02:21 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில், கவர்னர் மாளியை ஒட்டி, 5 ஏக்கர் நிலம் உள்ளது. மெட்ராஸ் ரேஸ் கிளப் நிறுவனத்திடம் இருந்து, இந்த நிலத்தை சில ஆண்டுகள் முன்பு டி.எல்.எப்., நிறுவனம் வாங்கியது.

இங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அந்நிறுவனம் திட்டமிட்டது. ஆனால், இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலத்தை சோழமண்டலம் நிதி நிறுவனத்துக்கு டி.எல்.எப்., நிறுவனம் மார்ச் மாதம் வாங்கியது. அப்போது, 735 கோடி ரூபாய்க்கு இந்த நிலம் கைமாறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலத்தில், தங்களுக்கான தலைமை அலுவலக வளாகத்தை கட்ட சோழமண்டலம் நிதி நிறுவனம் முடிவு செய்தது.

இதன்படி, இங்கு 10 அல்லது 15 மாடி வரையிலான அடுக்குமாடி அலுவலக வளாகம் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தின் சுற்று வட்டாரத்தில், அதிக உயரத்துக்கு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது, அதற்கு ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தான் புதிய கட்டுமான திட்டத்துக்கு ஒப்புதல் பெற முடியும்.

எனவே, தற்போது, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் இருந்து சோழமண்டலம் நிறுவனம் புதிய கட்டடத்துக்கான தடையின்மை சான்றிதழ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து புதிய கட்டடத்துக்கான கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என நகரமைப்பு வல்லுனர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us