sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஸ்கூட்டர் மீது லாரி மோதி துணிக்கடை ஊழியர் பலி

/

ஸ்கூட்டர் மீது லாரி மோதி துணிக்கடை ஊழியர் பலி

ஸ்கூட்டர் மீது லாரி மோதி துணிக்கடை ஊழியர் பலி

ஸ்கூட்டர் மீது லாரி மோதி துணிக்கடை ஊழியர் பலி


ADDED : ஏப் 27, 2025 01:37 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கரணை:பள்ளிகரணை, கிருஷ்ணா நகர், முதல் தெருவை சேர்ந்தவர் அன்பழகன், 56. இவர், ஜல்லடியன்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், இவர் நேற்று இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு செல்வதற்காக, தனது 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தில், வேளச்சேரி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.

பள்ளிக்கரணை, துலுக்காத்தம்மன் சாலை சந்திப்பில் திரும்பும்போது பின்னால் வந்த டாரஸ் லாரிக, எதிர்பாராத விதமாக மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்த தகவலின்படி, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அன்பழகன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரான விழுப்புரத்தை சேர்ந்த மணிவண்ணன், 30, என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே பகுதியில், கடந்த 14ம் தேதி, கண்டிகையை சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் பெருமாள், 74, என்பவர், சாலையை கடந்த போது, ஸ்கார்பியோ கார் மோதி விபத்திற்குள்ளானார்.

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த இவர், நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us