sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கழிவுநீர் வெளியேற்று நிலையத்தில் காரிய மண்டபம் கட்டும் பணி நிறுத்தம்

/

கழிவுநீர் வெளியேற்று நிலையத்தில் காரிய மண்டபம் கட்டும் பணி நிறுத்தம்

கழிவுநீர் வெளியேற்று நிலையத்தில் காரிய மண்டபம் கட்டும் பணி நிறுத்தம்

கழிவுநீர் வெளியேற்று நிலையத்தில் காரிய மண்டபம் கட்டும் பணி நிறுத்தம்


ADDED : ஏப் 04, 2025 12:18 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி, அடையாறு மண்டலம், 175வது வார்டில், காரிய மண்டபம் கட்ட, 21 லட்சம் ரூபாய் நிதியை மாநகராட்சி ஒதுக்கியது.

ஆனால், முறையான இடம் தேர்வு செய்யப்படாமல், காலியாக உள்ள இதர துறைகளின் இடத்தில் கட்டும் வகையில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துறையின் காலி இடத்திலும், காரிய மண்டபம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இங்கு, வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள கழிவுநீர் வெளியேற்று நிலையம், 20 ஆண்டுக்கு மேலாக செயல்படுகிறது. குடிநீர் வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது.

சுற்றி காம்பவுன்ட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில், காரிய மண்டபம் கட்டும் பணி, இரு தினங்களுக்கு முன் துவங்கியது.

ஆனால், குடிநீர் வாரியத்தில் முறையாக அனுமதி பெறவில்லை. கழிவுநீர் கையாளும் இடத்தில் காரிய மண்டபம் கட்ட, அப்பகுதிவாசிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு காரிய மண்டபம் கட்டுவதை, மாநகராட்சி நிறுத்தியது. அதிகாரிகள் மாற்று இடம் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us