sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சி தொடக்க பள்ளி நடுநிலையாக தரம் உயர்வு

/

மாநகராட்சி தொடக்க பள்ளி நடுநிலையாக தரம் உயர்வு

மாநகராட்சி தொடக்க பள்ளி நடுநிலையாக தரம் உயர்வு

மாநகராட்சி தொடக்க பள்ளி நடுநிலையாக தரம் உயர்வு


ADDED : மே 12, 2025 12:28 AM

Google News

ADDED : மே 12, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி:அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள, 35 சென்ட் இடத்தில், மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது.

இங்கு, 360 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளியை, நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

போதிய வகுப்பறை இல்லாததால், தரம் உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏற்கனவே ஐந்து வகுப்பறைகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஒரு கோடி ரூபாயில், நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன.

இதனால், இந்த பள்ளியை, நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

வரும் கல்வியாண்டு முதல், நடுநிலை பள்ளியாக தரம் உயர்வதுடன், ஒரு கோடி ரூபாயில், கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us