UPDATED : ஜூலை 01, 2026 06:09 PM
ADDED : ஜூலை 01, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
டி.பி.சத்திரம்: டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், 40, என்பவரை கொன்ற வழக்கில், 2017ல் கைது செய்யப்பட் ரஞ்சித்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமினில் வந்த ரஞ்சித்குமார், சென்னை உயர் நீதிமன்ற 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். கடந்த ஜூன் 1ல் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து டி.பி.சத்திரம் பகுதியில் பதுங்கியிருந்த ரஞ்சித்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறையில் அடைத்தனர்.
