UPDATED : செப் 17, 2026 03:52 PM
ADDED : செப் 17, 2026 03:01 PM
அ நிறம் | அளவு
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரத்தில் காயிலாங்கடை வைத்துள்ளவர் சையது அஸ்வத் பாஷா, 30. கடந்த 8ம் தேதி காலை கடையில் இருந்த 50,000 ரூபாய் மதிப்பிலான, 50 கிலோ காப்பர் கம்பிகள் திருடுபோயின.
ஆதம்பாக்கம் போலீசாரின் விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது, ஆதம்பாக்கம், அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த வசந்த், 25, சாஸ்திரி நகரைச் சேர்ந்த பிரவீன்குமார், 26, என்பது தெரியவந்தது. இருவரையும் செப்., 16 இரவு கைது செய்த போலீசார் 15 கிலோ காப்பர் கம்பிகளை பறிமுதல் செய்தனர். 35 கிலோ காப்பர் கம்பிகளை விற்பனை செய்து செலவழித்தது தெரியவந்தது.
