ADDED : ஆக 14, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : கிண்டி அரசு ஐ.டி.ஐ.,யில் சேர விரும்புவோர், வரும் 31ம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், புகைப்படக் கலைஞர், பில்டர், உணவு உற்பத்தியாளர், ஸ்மார்ட் போன் தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
நிலையத்தில், 2025ம் ஆண்டிற்காக நேரடி சேர்க்கை நடந்து வருகிறது. பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர், இம்மாதம் 31ம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம்.
விபரங்களுக்கு, பயிற்சி நிலையத்தை நேரில் அணுகலாம் அல்லது 94990 55649 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.