/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச புலிகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி
/
சர்வதேச புலிகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி
சர்வதேச புலிகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி
சர்வதேச புலிகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி
UPDATED : ஜூலை 31, 2025 02:46 PM
ADDED : ஜூலை 31, 2025 12:26 AM
தாம்பரம்சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, வண்டலுார் உயிரியல் பூங்கா நிர்வாகம், 3 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக, புலிகள் குறித்த ஓவியப் போட்டியை நடத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 29ம் தேதி, சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி, வண்டலுார் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில், தொலைதுார பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று முன்தினம், திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில், புலிகள் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அதில், பூங்கா பயிற்றுனர் சங்கரி, காடுகளுக்கு புலிகளின் முக்கியத்துவம், புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, திரையின் வாயிலாகவும், அறிவியல் ரீதியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அடுத்த கட்டமாக, புலிகள் குறித்து பள்ளி மாணவர்கள் அதிகளவில் தெரிந்து கொள்ளும் வகையில், ஆன்லைன் வாயிலான ஓவியப் போட்டியை, பூங்கா நிர்வாகம் நடத்துகிறது. இந்த போட்டியில், 3 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்.
இதில், 3 முதல் 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு, 'புலிகளின் இயற்கையான வாழ்விடம்' 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'எதிர்கால காடு - புலிகளின் பாதுகாப்பு, 9 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு 'காடுகளின் பாதுகாப்பு' என்ற தலைப்பில், இப்போட்டி நடத்தப்படும்.
Advertisement
இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களில், முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கும் இந்த ஆன்லைன் ஓவியப் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவ - மாணவியர், http://aazp.in/drawing-competition-202/ என்ற இணையதளத்தில், தாங்கள் வரைந்த ஓவியங்களை பதிவிட்டு, போட்டியில் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

