sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.24 லட்சம் போதை பொருள் எழும்பூரில் சிக்கியது: 2 பேர் கைது

/

ரூ.24 லட்சம் போதை பொருள் எழும்பூரில் சிக்கியது: 2 பேர் கைது

ரூ.24 லட்சம் போதை பொருள் எழும்பூரில் சிக்கியது: 2 பேர் கைது

ரூ.24 லட்சம் போதை பொருள் எழும்பூரில் சிக்கியது: 2 பேர் கைது


ADDED : டிச 17, 2024 12:22 AM

Google News

ADDED : டிச 17, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகே, கிழக்கு மண்டல இணை கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, 'ஹூண்டாய் ஐ - 20' காரில் வந்த பெண் உட்பட இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களது முரண்பாடான பதிலால், காரில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், 705 கிராம் 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப் பொருள், 6 கிலோ கஞ்சா சிக்கியது. இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில், கோயம்பேடு, அழகப்பா நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், 39, என்பதும், கோயம்பேடு சந்தையில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ஹோட்டல்களுக்கும் காய்கறி சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா பேகம், 24, என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கார், பத்திரிகையாளர் ஒருவரது என்பது தெரிய வந்தது. மேலும். சிக்கிய போதைப் பொருளின் மதிப்பு, 24 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

விசாரணையில், பாத்திமா பேகமும், சாய்தீன் என்பவரும், அசாமில் இருந்து போதைப் பொருட்களை ரயிலில் கடத்தி வந்து, பாலசுப்ரமணியனிடம் கொடுப்பதும், அவற்றை அவர் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துது.

பாலசுப்ரமணியன் மீது மும்பையில் தங்க கடத்தில் வழக்கு உள்ளது தெரிய வந்தது.

6 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, நேற்று காலை ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இருந்து எழும்பூர் வழியாக, புதுச்சேரிக்கு இயக்கப்படும், 'சர்க்கார்' விரைவு ரயில் வந்தது. இந்த ரயிலில் பயணியர் இறங்கிச் சென்ற பின், ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது, ரயிலின் முன்பக்க பொது பெட்டியில், கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை உரிமை கோரி யாரும் முன் வரவில்லை.இதையடுத்து, அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் ஆறு கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு 1.20 லட்சம் ரூபாய்.இந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அதுகுறித்து விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us