/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை கடந்த முதியவர் டிப்பர் லாரி மோதி பலி
/
சாலையை கடந்த முதியவர் டிப்பர் லாரி மோதி பலி
ADDED : ஏப் 10, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை, குன்றத்துார் அருகே படப்பை டேவிட் நகரை சேர்ந்தவர் லட்சுமணன், 89. இவர், நேற்று முன்தினம் இரவு, படப்பை பஜார் பகுதியில், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நடந்து கடக்க முயன்றார்.
அப்போது, அந்த வழியே வேகமாக சென்ற டிப்பர் லாரி, லட்சுமணன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அஷ்ரப் அலி, 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

