ADDED : ஜன 31, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
ஆவடிஆவடி அடுத்த அண்ணனுார் ரயில் நிலையம், நடைமேடையோரத்தில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தண்டவாளத்தை கடக்கும் போது, சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.