ADDED : நவ 20, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: அண்ணனுார் ரயில் நிலையத்தில், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக, ஆவடி ரயில்வே போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
தண்டவாளத்தை கடக்கும் போது, சென்னைக்கு சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு, அவர் இறந்தது தெரிந்தது.
போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.

