/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி, பெரம்பூரில் மின் குறைதீர் கூட்டம்
/
ஆவடி, பெரம்பூரில் மின் குறைதீர் கூட்டம்
ADDED : ஏப் 03, 2025 12:41 AM
சென்னை, சென்னை எழும்பூர், பெரம்பூர், ஆவடியில் நாளை, 4ம் தேதி காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
* எழும்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 33/11 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், எண் 53, ஈ.வி.கே., சம்பத் சாலை, வேப்பேரி.
* ஆவடி: செயற்பொறியாளர் அலுவலகம், 230 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி.
* பெரம்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் செம்பியம் துணைமின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.ரோடு, சிம்சன் எதிரில், சென்னை - 11.
மேற்கண்ட இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பெரம்பூர், ஆவடி, எழும்பூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்துபயன்பெறலாம்.