ADDED : டிச 15, 2024 07:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:போரூர், செட்டியார் அகரம் சாலையில், 110 கிலோ வோல்ட் திறனில், எஸ்.ஆர்.எம்.சி., துணை மின் நிலையம் உள்ளது. அந்த வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள போரூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை மறுநாள் - 17ம் தேதி முற்பகல் 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில், போரூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான அனைத்து குறைகளையும், மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.