ADDED : நவ 05, 2025 02:50 AM
சென்னை: சென்னை எழும்பூர், ஆவடி, பெரம்பூர் ஆகிய இடங்களில், நாளை, 7ம் தேதி காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
எழும்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், எண். 53, ஈ.வி.கே.சம்பத் சாலை, 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலைய வளாகம், வேப்பேரி.
ஆவடி: செயற்பொறியாளர் அலுவலகம், 230 கி.வோ., துணை மின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி.
பெரம்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., செம்பியம் துணை மின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.ரோடு, சிம்சன் எதிரில், சென்னை - 11.
மேற்கண்ட இடங்களில் நடக்கும் குறைதீர் முகாமில், எழும்பூர், ஆவடி, பெரம்பூர் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின் தடை, கூடுதல் மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.

