sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வேளச்சேரியில் ஆக்கிரமிப்பாளர்கள் அடாவடி 'சமூக சோலை' திட்டத்திற்கு தொடரும் சிக்கல்

/

வேளச்சேரியில் ஆக்கிரமிப்பாளர்கள் அடாவடி 'சமூக சோலை' திட்டத்திற்கு தொடரும் சிக்கல்

வேளச்சேரியில் ஆக்கிரமிப்பாளர்கள் அடாவடி 'சமூக சோலை' திட்டத்திற்கு தொடரும் சிக்கல்

வேளச்சேரியில் ஆக்கிரமிப்பாளர்கள் அடாவடி 'சமூக சோலை' திட்டத்திற்கு தொடரும் சிக்கல்


ADDED : ஆக 04, 2025 02:51 AM

Google News

ADDED : ஆக 04, 2025 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,:வேளச்சேரி ரயில்வே சாலையில், 'சமூக சோலை' என்ற திட்டத்தை துவங்க மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால், அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பாளர்களால், இத்திட்டம் செயல்வடிவம் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக, வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.

வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலை, 2.5 கி.மீ., துாரம், 80 அடி அகலம் கொண்டது. இந்த சாலை, ரயில்வே நிர்வாகத்தின் கீழ் உள்ளது. வேளச்சேரி, பெருங்குடி, தரமணி ரயில் நிலையம் செல்வோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

மேலும், ஆதம்பாக்கம், நங்கநல்லுார், மடிப்பாக்கம், வேளச்சேரி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், ஓ.எம்.ஆர்., டைடல் பார்க், திருவான்மியூர், அடையாறு நோக்கி செல்ல, துரித பயணத்திற்கு இந்த சாலை வழியாக செல்கின்றனர்.

இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக மாறியுள்ளது. இந்த சாலையை பராமரிக்க ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை. இதனால், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, 8 கோடி ரூபாயில் சாலை புதுப்பிப்பு, 1.37 கோடி ரூபாயில் வடிகால்வாய் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன.

இந்த சாலையை ஒட்டி, ரயில்வே மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமாக உள்ள காலி இடங்களின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தன.

நம் நாளிதழ் செய்தி மற்றும் உயர் நீதிமன்ற தலையீடு காரணமாக, பெரும் பகுதி மீட்கப்பட்டது. இன்னும், 10 ஏக்கருக்கு மேல் மீட்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில், மீட்கப்பட்ட இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட்டு, மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த ஆண்டு பருவமழையின் போது, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர், இந்த பகுதியை பார்வையிட்டனர். அப்போது, இந்த பகுதியை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என, அதிகாரிகளுக்கு இருவரும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, 2.5 கி.மீ., துாரத்தை சமூக சோலையாக மாற்ற, மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

இதில், நடைபயிற்சி பாதை, பறவைகள் சரணாலயம், சைக்கிள் பாதை, கலந்துரையாடல் கூடம், கடைகள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், மரக்கன்றுகள், இருக்கை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

கடந்த ஜூன் மாதம் துவங்க வேண்டிய இத்திட்டத்திற்கு, ஆக்கிரமிப்பாளர்களின் இடையூறு காரணமாக இழுபறி ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தை வேகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

துணை கமிஷனர் வேகப்படுத்துவாரா?

'சமூக சோலை' திட்டத்தை முடக்க, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் முயற்சி செய்து வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர் கூறியதால், இத்திட்டத்தை வேகப்படுத்த, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், தெற்கு வட்டார துணை கமிஷனராக இருந்த அமித் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து வந்தனர். இருந்தும், திட்டத்திற்கு ஒதுக்கும் நிதியை முடக்க, சிலர் இடையூறு செய்துள்ளனர். இதனால், ஜூன் மாதம் துவங்க வேண்டிய பணியில் இழுபறி நீடிக்கிறது. மூன்று ஆண்டுகள் பணிபுரிந்ததால், அமித் இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, துணை கமிஷனராக அதாப் ரசூல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சமூக சோலை திட்டத்தை வேகப்படுத்த வேண்டும் என, வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.








      Dinamalar
      Follow us