/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்
/
மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்
மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்
மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்
ADDED : ஏப் 08, 2025 11:49 PM

தி.நகர், தி.நகர் மாம்பலம் நெடுஞ்சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
தி.நகரில் மாம்பலம் நெடுஞ்சாலையில், கோடம்பாக்கம் செல்லும் ரங்கராஜபுரம் சுரங்கபாதை உள்ளது. இதில், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.
இந்த சுரங்கப்பாதை அருகே, நடை பாதை கடைகள் முளைத்துள்ளன. இந்த கடைகளில் பொருட்கள் வாங்க வருவோர், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விடுகின்றனர்.
இதனால், இச்சாலையில் காலை, மாலை நேரங்களில், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நெரிசல் ஏற்பட்டு, பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, நடைபாதை ஆக்கிரிமப்புகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறத்தி உள்ளனர்.

