sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புழல் உபரி கால்வாயில் நீரோட்டம் பாதிப்பு மூன்று வார்டுகளுக்கு வெள்ள அபாயம்

/

புழல் உபரி கால்வாயில் நீரோட்டம் பாதிப்பு மூன்று வார்டுகளுக்கு வெள்ள அபாயம்

புழல் உபரி கால்வாயில் நீரோட்டம் பாதிப்பு மூன்று வார்டுகளுக்கு வெள்ள அபாயம்

புழல் உபரி கால்வாயில் நீரோட்டம் பாதிப்பு மூன்று வார்டுகளுக்கு வெள்ள அபாயம்


ADDED : நவ 05, 2025 03:00 AM

Google News

ADDED : நவ 05, 2025 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி: புழல் உபரிக் கால்வாயில், ஆகாயத்தாமரை செடிகளால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால், மணலியின் மூன்று வார்டுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

புழல் ஏரி உபரி நீரானது, புழல், காவாங்கரை, சாமியார் மடம், வடபெரும்பாக்கம், ஆமுல்லைவாயல், எஸ்.ஆர்.எப்., பர்மா நகர் உயர்மட்ட பாலம், சடையங்குப்பம் மேம்பாலம் வழியாக, கொசஸ்தலை உபரி நீருடன் கலந்து சென்று, கடலில் கலக்கிறது.

இந்நிலையில், ஆமுல்லைவாயல் மேம்பாலம் அருகே, 300 மீட்டர் துாரத்திற்கு, ஆகாய தாமரைச் செடிகள், நீரோட்டத்தை தடுக்கும் வகையில் குவிந்துள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் கவனித்து, இந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றினால் மட்டுமே, உபரி நீர், தங்கு தடையின்றி செல்லும்.

இல்லாவிடில், மணலி, 16, 17, 18 ஆகிய வார்டுகள் வெள்ள நீரால் பாதிக்கும்.

தவிர ஆமுல்லைவாயல் உயர்மட்ட பாலம் அருகே, 2017ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரியம் பல்லவி பல்தேவ் தலைமையிலான மழை கண்காணிப்பு குழுவால், மீட்கப்பட்ட 'மடுவு' நீர்வழிப் பாதையை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us