/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு வக்கீல் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
/
அரசு வக்கீல் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
ADDED : டிச 29, 2025 06:59 AM
சென்னை: அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கான தேர்வுக்கு, இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
மனிதநேய ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தின் தலைவர் சைதை துரைசாமி மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர்கள் நிலை இரண்டு என்ற பணியில், 61 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்பணியில் சேர்வதற்கு, சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இணைந்து, ஜன., 5ல் இருந்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர், ஜன., 4ம் தேதி வரை, எண்: 28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி., நகர், சென்னை - 35 என்ற முகவரியில் செயல்படும், மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகத்திற்கு, புகைப்படத்துடன் நேரில் வந்து பதிவு செய்யலாம்.
அதேபோல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை பதிவு செய்யலாம்.
மேலும், தகவல்களுக்கு, 044 - 2435 8373; 2433 0952; 2535 2593 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 98404 39393; 84284 31107 ஆகிய மொபைல் போன் எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

