sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவருக்கு கத்திக்குத்து :கொடுங்கையூர் ரவுடி கைது

/

மாணவருக்கு கத்திக்குத்து :கொடுங்கையூர் ரவுடி கைது

மாணவருக்கு கத்திக்குத்து :கொடுங்கையூர் ரவுடி கைது

மாணவருக்கு கத்திக்குத்து :கொடுங்கையூர் ரவுடி கைது


ADDED : செப் 28, 2025 11:46 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்:இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரை கத்தியால் குத்திய ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் வினித், 21; இன்ஜினியரிங் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவர்.

இவர் கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், ஜவஹர் தெருவில் உள்ள கடையில், நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் பிடிப்பது வழக்கம்.

நேற்று, வினித் தனியாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த கடைக்கு போதையில் வந்த மர்ம நபர், கடைக்காரரிடம் பொருள் ஒன்றை கேட்க, அவர் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதில் கடைக்காரருக்கும், போதை ஆசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இருவரையும் விலக்கி விட, வினித் முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, மறைத்து வைத்திருந்த கத்தியால், வினித்தை வயிற்றில் குத்திவிட்டுத் தப்பினார்.

படுகாயமடைந்த வினித்தை, அங்கிருந்தோர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இதில், அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்த சரத்குமார் என்கிற 'கோழி' சரத், கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவரை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us