sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'குளோபல் கோல்ஸ்' கால்பந்து 12 அணிகள் பலப்பரீட்சை

/

'குளோபல் கோல்ஸ்' கால்பந்து 12 அணிகள் பலப்பரீட்சை

'குளோபல் கோல்ஸ்' கால்பந்து 12 அணிகள் பலப்பரீட்சை

'குளோபல் கோல்ஸ்' கால்பந்து 12 அணிகள் பலப்பரீட்சை


ADDED : ஜன 26, 2025 02:12 AM

Google News

ADDED : ஜன 26, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'குளோபல் கோல்ஸ்' சாம்பியன்ஷிப் கோப்பைக்கான கால்பந்து போட்டிகளில், 12 கல்லுாரி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி இலக்குகள் அமைப்பு சார்பில், 'குளோபல் கோல்ஸ்' என்ற பெயரில் கால்பந்து போட்டி, நேற்று முன்தினம் துவங்கின.

போட்டிகள், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடக்கின்றன. போட்டியில், ஆண்களில் எட்டு கல்லுாரிகளும், பெண்களில் நான்கு கல்லுாரிகளும் பங்கேற்றுள்ளன.

ஆண்களுக்கான முதல் போட்டியில், நாசரத்து அணி, 4 - 2 என்ற கணக்கில் லயோலாவையும், ஜேப்பியார் அணி, 1 - 0 என்ற கோல் கணக்கில் நியூ கல்லுாரியையும் வீழ்த்தின.

நேற்று காலை நடந்த பெண்களுக்கான ஆட்டத்தில், எம்.ஓ.பி., வைஷ்ணவா அணி, 2 - 0 என்ற கணக்கில் ராணி மேரியையும், ரத்தினம் கல்லுாரி, 5 - 2 என்ற கணக்கில் எம்.ஜி.ஆர்., பல்கலையையும் வீழ்த்தின.

மற்றொரு போட்டியில், ரத்தினம் கல்லுாரி, 2 - 0 என்ற கணக்கில் நாசரத் கல்லுாரியை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்கின்றன.






      Dinamalar
      Follow us