ADDED : பிப் 21, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகரில் 1,500 மாணவியர் உருவாக்கிய 'தமிழ்' எழுத்து
அண்ணா நகர், உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அண்ணா நகர் வள்ளியம்மை கல்லுாரியில், 1,500 மாணவியர், 'தமிழ்' எழுத்து வடிவில் நின்று அசத்தினர்.
ஆண்டுதோறும், உலக தாய்மொழி தினமாக, பிப்., 21ம் தேதி, அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, நேற்று அண்ணா நகரில் உள்ள வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்வில், தாய் மொழியாகிய தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில், கல்லுாரியின், 18 பல்துறையின், 1,500 மாணவியர், 'தமிழ்' என்ற எழுத்து வடிவில் நின்ற சாதனை படைத்தனர். இன்று, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளும் நடக்க உள்ளது.

