sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு வார்டு திறப்பு

/

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு வார்டு திறப்பு

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு வார்டு திறப்பு

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு வார்டு திறப்பு


ADDED : நவ 08, 2024 12:35 AM

Google News

ADDED : நவ 08, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 50 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

'ப்ளூ' வைரஸ்களால் பரவும் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், டெங்கு, நுரையீரல் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றாலும், டிசம்பர் வரை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால், காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்ப, சிறப்பு வார்டுகள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு, நேற்று திறந்து வைக்கப்பட்டன.

இதுகுறித்து, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:

டெங்கு, இன்ப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 50 படுக்கையுடன் கூடிய சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதில், 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தற்போது வரை, 15 வார்டுகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தேவைக்கு ஏற்ப, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us