ADDED : நவ 20, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, நாளை மறுநாளான, 22ம் தேதி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன.
இந்த முகாம், கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது. இதில், 8ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம். முகாமில், 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
பங்கேற்க விரும்புவோர், தங்கள் விபரங்களை, www.tnprivatejobs.tn.gov.in இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.