/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லயோலாவின் 'பெர்ட்ரம்' போட்டிகள் 15ல் துவக்கம்
/
லயோலாவின் 'பெர்ட்ரம்' போட்டிகள் 15ல் துவக்கம்
ADDED : ஆக 06, 2025 12:24 AM
சென்னை, லயோலா கல்லுாரியின், 'பெர்ட்ரம்' கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், நுங்கம்பாக்கத்தில் வரும், 15ம் தேதி துவங்குகிறது.
லயோலா கல்லுாரியின் நிறுவனர், 'பெர்ட்ரம்' நினைவு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், 91வது ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில், வரும் 15ம் தேதி துவங்க உள்ளது.
கல்லுாரிகள் அளவில், வாலிபால், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், கோ - கோ, உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. சிறப்பு போட்டியாக, மாற்றுத்திறனாளிகளுக்கு வாலிபால் மற்றும் செஸ் போட்டிகள் நடக்கின்றன. பள்ளிகள் அளவில் வாலிபால் மற்றும் கூடைப்பந்து போட்டிகள் நடக்கின்றன.
இதில், 16 பள்ளிகள், 50 கல்லுாரி அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள், நாக் அவுட் மற்றும் லீக் முறையில், 31ம் தேதிகள் வரை நடக்கின்றன.
***