/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - போத்தனுார் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
/
சென்னை - போத்தனுார் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ADDED : அக் 24, 2024 12:32 AM
சென்னை,
தீபாவளி கூட்ட நெரிசலை கருத்தில் வைத்து, சென்னை - கோயம்புத்துார் போத்தனுார் மற்றும் மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 29, நவ., 2ம் தேதிகளில், இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு போத்தனுார் செல்லும்
கோவையில் இருந்து வரும் 31ம், நவ., 4ம் தேதிகளில் நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாளில் காலை 9:30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் இருந்து, வரும் 29ம் தேதி இரவு 7:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:45 மணிக்கு, எழும்பூர் வரும்.
எழும்பூரில் இருந்து வரும் 30ம் தேதி பகல் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் வரும். இந்த சிறப்பு ரயில்களில், இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும்.
திருநெல்வேலி ரயில்
தீபாவளியொட்டி, தாம்பரம் - திருநெல்வேலி இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
திருநெல்வேலியில் இருந்து, வரும் நவ., 3ம் தேதி மாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் வரும்.
தாம்பரத்தில் இருந்து, நவ., 4ம் தேதி மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு திருநெல்வேலி செல்லும். இந்த சிறப்பு ரயில்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, சிவகாசி, தென்காசி வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிறது.
முன்பதிவு துவங்கி உள்ளது.