ADDED : மார் 04, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர்:அமைந்தகரை காவல் நிலையம் அருகே சிமென்ட் லாரி மோதி, முதியவர் உயிரிழந்தார்.
சென்னை, வில்லிவாக்கம், சிட்கோ நகரைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி, 76. இவர் நேற்று முன்தினம், அண்ணா வளைவு பகுதி வழியாக, பைக்கில் வீடு திரும்பினார்.
அமைந்தகரை காவல் நிலையம் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த சிமென்ட் லாரி மோதியதில், கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்தோணிசாமி, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய மன்னார்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் செந்தில்குமார், 41, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

