/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை தகராறில் ஒருவர் பலி சக தொழிலாளி கைது
/
போதை தகராறில் ஒருவர் பலி சக தொழிலாளி கைது
ADDED : ஏப் 20, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.சி.எப்.,
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் துர்கேஷ் குப்தா, 40, விரித்தேஷ் 27. இருவரும் சென்னையில் தங்கி, பெயின்டிங் வேலை செய்து வந்தனர்.
இருவரும் கடந்த 30ம் தேதி, அயனாவரம், மயிலப்பத் தெருவில், மூன்று மாடி கட்டடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இரவில், இருவரும் அதே இடத்தில் மது அருந்தியபோது, இருவரும் தாக்கிக் கொண்டதில் மொட்டை மாடியில் இருந்து விழுந்தனர். காயமடைந்த துர்கேஷ் குப்தா அங்கேயே உயிரிழந்தார்.
படுகாயத்துடன் இருந்த விரித்தேைஷ, அங்கிருந்தோர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து திரும்பிய விரித்தேைஷ, நேற்று போலீசார் கைது செய்தனர்.

