sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 'ஓராண்டு'

/

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 'ஓராண்டு'

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 'ஓராண்டு'

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 'ஓராண்டு'


ADDED : அக் 19, 2024 12:23 AM

Google News

ADDED : அக் 19, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம், மல்ரோசாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான். இவர், காஞ்சிபுரம் கதர் கிராம தொழில்கள் அலுவலகத்தில், பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன் பெற, 2008ல் மனு அளித்தார்.

இந்த அலுவலகத்தில், தேனீ பிரிவுக்கான கள அலுவலராக பணியாற்றி வந்த சக்கரை என்பவரை தொடர்பு கொண்டார்.

அப்போது, மனு மீது நடவடிக்கை எடுக்க, 1,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என, அவர் கேட்டுள்ளார்.

இதற்கு உடன்படாத ஜான், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுரைபடி, 2009 ஜன., 7ல் லஞ்ச பணம் 1,000 ரூபாயை கொடுத்தார். அதை சக்கரை பெற்றபோது, போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இவ்வழக்கு விசாரணை, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

விசாரணை முடிந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கைது செய்யப்பட்ட சக்கரை என்பவருக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி வசந்தகுமார் நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us